ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கரோனா: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் பலி

சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :21 ஜூன் 2020, 7:50 am

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் 4 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரும் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் தற்போது 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.