ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்: பொதுமக்கள் கடும் அவதி

மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கி பாதையில் ஏராளமான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

News image
Updated On :28 ஜூன் 2020, 4:39 am

DIN


மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கி பாதையில் ஏராளமான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இடதுகரையில் உபரி நீரை வெளியேற்ற உபரி நீர் போக்கி அமைக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பியதும் கூடுதலாக வரும் தண்ணீரை அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் உபரி நீர் போக்கி பாதையில் பல இடங்களில் குட்டையாக தேங்கி நிற்கும். அவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகளில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த குட்டைகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

தற்போது இப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் செத்து மிதப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். செத்து மிதக்கும் மீன்களில் ஜிலேபி, அரஞ்சான், ஆரால், கெழுத்தி உள்ளிட்டவை.  மீன்கள் செத்து மிதப்பதால் தங்கமாரிபட்டினம், சேலம் கேம்ப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.