கரோனா: நாகலாந்து தலைமைச் செயலகம் மூடல்

நாகலாந்து தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால் திங்கள்கிழமை முதல் 48 மணிநேரத்திற்கு செயலகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாகலாந்து தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால் திங்கள்கிழமை முதல் 48 மணிநேரத்திற்கு செயலகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் லித்ரோங்லா டோங்பி ருட்சா கூறுகையில், தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கரோனா உறுதியானதால் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 48 மணிநேரத்திற்கு அலுவலகம் மூடப்பட்டு செயலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தார். 

நாகாலாந்தில் இதுவரை 9,885 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com