பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அலட்சியம் காட்டும் பாகிஸ்தான் மக்கள்: மீண்டும் பொதுமுடக்க எச்சரிக்கை

பாகிஸ்தான் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் கரோனா தொற்றை குறைக்க மீண்டும் பொதுமுடக்கம் போடப்படும் என தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

News image
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு (கோப்புப்படம்)
Updated On :21 அக்டோபர் 2020, 11:50 am

DIN

பாகிஸ்தான் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினால் கரோனா தொற்றை குறைக்க மீண்டும் பொதுமுடக்கம் போடப்படும் என தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 19 பேர் ஒரே நாளில் பலியானதை அடுத்து புதன்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் பொதுமுடக்கத்தை தளர்த்திய பிறகு நாள்தோறும் பலியாவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகின்றது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,24,744 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,692 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.