புதுச்சேரியில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறக்கும் நேரத்தை நீட்டித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள கடைகள், தனியார் அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்து வைக்க தளர்வு அளிக்கப்படுகிறது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், புதுச்சேரியில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...