ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மக்களவையின் சராசரி வருகைப்பதிவு 68.65 சதவீதம் : ஓம் பிர்லா

மழைக்கால கூட்டத் தொடரின் வருகைப் பதிவு சராசரியாக 68.65 சதவீதம் இருந்ததாக வெள்ளிக்கிழமை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

News image
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Updated On :25 செப்டம்பர் 2020, 1:07 pm

ANI

மழைக்கால கூட்டத் தொடரின் வருகைப் பதிவு சராசரியாக 68.65 சதவீதம் இருந்ததாக வெள்ளிக்கிழமை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில்,

மழைக்கால கூட்டத் தொடரானது செப்டம்பர் 14 முதல் 23 வரை நடைபெற்றது. இதில், 8,700  கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில், மக்களவையின் வருகைப்பதிவானது சராசரியாக 68.65 சதவீதமாக இருந்தது.

அமர்வுக்கு முன் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

பின், மக்களவையில் கரோனா பற்றிய விவாதமானது 5 மணிநேரம் 8 நிமிடங்கள் நீடித்தது. இதில் 74 உறுப்பினர்கள் உரையாடினார்கள்.

கரோனா காரணமாக நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இரு அவைகளிலும் உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கூட்டத் தொடரில் பங்கு பெற்றனர்.

அமர்வின் முதல் நாளில் மக்களவையில் 369 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 22 ம் தேதி ஆதிகபட்சமாக 383 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். சராசரி வருகை 370 ஆக இருந்தது, இது 68.65 சதவீதமாக ஆகும்.

35 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்த விவாதத்திற்குப் பிறகு மக்களவையில் 25 மசோதாக்களை நிறைவேற்றப்பட்டது.

பூஜ்ஜிய மணி நேரத்தில், 88 எம்.பி.க்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பினர். பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்காக சபை 10 மணி 23 நிமிடங்கள் ஒதுக்கியது, 370 எம்.பி.க்கள் பூஜ்ஜிய நேரத்தில் பேசினர்.

உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020 மற்றும் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, 2020 தொடர்பான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020 ஆகிய மசோதாக்களின் விவாதத்தில் 44 எம்.பி.க்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட பிற மசோதாக்களில் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 2020, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதா, 2020 மற்றும் தொற்று நோய் (திருத்த) மசோதா, 2020 ஆகியவை அடங்கும்.

டாக்டர் சுபாஷ் ராம்ராவ் பாண்டே மற்றும் டாக்டர் டி.என்.வி டி செந்தில் குமார் இருவரும் அதிகபட்சமாக 49 கேள்விகளைக் கேட்டனர்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலிருந்து அதிகபட்சம் 167 கேள்விகள், வேளாண் அமைச்சகத்திலிருந்து 150 மற்றும் ரயில்வே அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்திடமிருந்து தலா 11 கேள்விகள் கேட்கப்பட்டன.

அமைச்சர்கள் 40 பதில்களை வழங்கினர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் எல்லை நிலைமை குறித்தும், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கரோனா தொற்று குறித்தும், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் விவசாய மசோதாக்கள் குறித்தும் பேசினார்கள்.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் 21 மாதங்களில் முடிவடைந்து நாட்டின் 75 வது சுதந்திர தினத்தின் போது நிறைவடையும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.