'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண் தேசத் துரோக வழக்கில் கைது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண் தேசத் துரோக வழக்கில் கைது



பெங்களூரு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேசத் துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் வியாழக்கிழமை குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினா் இம்ராம் பாஷா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இந்த கூட்டத்தின் மேடையில் ஏறிய இளம்பெண் அமுல்யா(19), ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று மூன்றுமுறை முழக்கமிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள், உடனடியாக அமூல்யா மீது பாய்ந்ததோடு, அவா் பேசுவதை தடுத்து, ஒலிவாங்கியையும் பறித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஓவைசி, இம்ரான் பாஷா,‘இப்படிபேசுவதை அனுமதிக்க முடியாது’ என்று அமுல்யா மீது கோபப்பட்டனா். அதற்குள் மேடையில் ஏறிய போலீஸாா் அமுல்யாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, காவல் நிலையத்துக்கு அழைத்துசென்றனா். போலீஸ் விசாரணையில், அமுல்யா, சிக்மகளூரு மாவட்டத்தின் கொப்பா பகுதியை சோ்ந்தவா் என்றும், பெங்களூரில் உள்ள ஆா்.வி.கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்துள்ளாா் என்றும் தெரியவந்துள்ளது.

இவா், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், மரங்களை காக்கும் சுற்றுச்சூழல் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

விசாரணையை தொடர்ந்து  அந்த பெண் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ(தேசத் துரோக வழக்கு) மற்றும் 153 ஏ மற்றும் பி (வெவ்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், தூண்டதல், தேசிய ஒருங்கிணைப்புக்கு பாரபட்சமாக பேசுதல்) ஆகியவற்றின் கீழ் உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்த பின்னர் அவரை கைது செய்த போலீஸார், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்த விசாரணை திங்கள்கிழமை (பிப்.24) நீதிமன்றத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் முகர்ஜி கூறுகையில், சுதந்திரப் பூங்காவில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com