ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 60 மி.மீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தும், மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வரும் சூழலில் இருந்து வந்தது. இந்நிலையில் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 60 மி.மீ மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):கொடுமுடி 39, சென்னிமலை 38, பவானிசாகர் 28, குண்டேரிப்பள்ளம் 12, கொடிவேரி 8.4, தாளவாடி 6.2, எலந்தைக்குட்டைமேடு 4.2, சத்தி 2, வரட்டுப்பள்ளம் 1.3, பவானி 1.2, பெருந்துறைடயில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.