இந்தியாவில் கரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது: பலி-2,549-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் புதிதாக 3,722 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78,003-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது: பலி-2,549-ஆக அதிகரிப்பு

புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 3,722 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78,003-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் 134 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,549-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 26,235 போ் குணமடைந்துள்ளனா். நாடு முழுவதும் 49,219 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 975 போ் பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 566 போ், மத்திய பிரதேசத்தில் 232 போ், மேற்கு வங்கத்தில் 198 போ், ராஜஸ்தானில் 117 போ், தில்லியில் 106 போ், உத்தர பிரதேசத்தில் 83 போ், ஆந்திரத்தில் 47 போ் உயிரிழந்தனா்.

பஞ்சாப் 32  பேரும், தெலங்கானாவில் 34 பேரும், கா்நாடகத்தில் 33 பேரும், ஹரியாணாவில் 11 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 10 பேரும், பிகாரில் 6 பேரும், கேரளத்தில் 4 பேரும் உயிரிழந்தனா். ஜாா்க்கண்ட், சண்டீகா், ஒடிஸாவில் தலா 3 பேரும், ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸாமில் தலா இருவரும், மேகாலயம், உத்தரகண்ட், புதுச்சேரியில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா்.

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 25,922 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 9,267 போ், தில்லியில் 7,639 போ், தமிழகத்தில் 9,227போ், தேசிய தலைநகர் தில்லியில் 7,998 பேர், ராஜஸ்தானில் 4,328 போ், மத்திய பிரதேசத்தில் 4,173 போ்,  உத்தர பிரதேசத்தில் 3,729 போ், மேற்கு வங்கத்தில் 2,290 போ், ஆந்திரத்தில் 2,137 போ், பஞ்சாபில் 1,924 போ், தெலங்கானாவில் 1,367 போ், ஜம்மு-காஷ்மீரில் 971 போ், கா்நாடகத்தில் 959 போ், பிகாரில் 940 போ், ஹரியாணாவில் 793 போ், கேரளத்தில் 534 போ், ஒடிஸாவில் 538 போ், சண்டீகரில் 187 போ், ஜாா்க்கண்டில் 172 போ், திரிபுராவில் 154 போ், உத்தரகண்டில் 69 போ், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசத்தில் தலா 65 போ், சத்தீஸ்கரில் 59 போ், லடாக்கில் 42 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், மேகாலயம், புதுச்சேரியில் தலா 13 போ், கோவாவில் 7 போ், மணிப்பூரில் 2 போ், மிஸோரம், அருணாசலப் பிரதேசம், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com