இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்குகிறது: பலி 2,872-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,987 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,927 -ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்குகிறது: பலி 2,872-ஆக அதிகரிப்பு


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,987 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,927 -ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 120 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,872-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்  53,946 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 9,33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 34,108 போ் குணமடைந்துள்ளனா். 

கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 30,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,135 பேர் பலியாகியுள்ளனர், 7,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதைத் தொடர்ந்து குஜராத்தில் 10,988 பேரும், தமிழ்நாட்டில் 10,585 பேரும், தில்லியில் 9,333 பேரும், ராஜஸ்தானில் 4,960 பேரும், ஆந்திரத்தில் 2,355 பேரும், தெலங்கானாவில் 1,509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 80% கரோனா தொற்று பாதிப்பு 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கணித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com