தில்லி எய்ம்ஸில் 20 மருத்துவர்களுக்கு கரோனா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
தில்லி எய்ம்ஸில் 20 மருத்துவர்களுக்கு கரோனா
தில்லி எய்ம்ஸில் 20 மருத்துவர்களுக்கு கரோனா
Updated on
1 min read

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலில், தொடர்ந்து மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த 37 மருத்துவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் 20 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

கடந்த 10 நாள்களில் 20 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 3 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com