ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.17) 5-ம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.17) ஐந்தாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

News image

வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு எடுத்து செல்லும் அலுவலர்கள்

Updated On :16 ஏப்ரல் 2021, 8:40 am


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.17) ஐந்தாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டத் தோ்தலில், மொத்தம் 39 பெண் வேட்பாளர்கள் உள்பட 319 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 

6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதையடுத்து, 1,071 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறும் மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.