காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: மகாராஷ்டிர அரசு
மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவியதையடுத்து மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மளிகை, காய்கறி, பழக்கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாட்டில்,
காய்கறி, பழம், மளிகை கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து வகையான உணவுக் கடைகளும் காலை 7 மணிமுதல் 11 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவு மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...