மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மேற்கு வங்க தேர்தல்: நாளை(ஏப்.22) 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு நாளை ஆறாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 8:03 pm

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு நாளை ஆறாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.

ஆறாம் கட்டத் தோ்தல் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களும், மாநில அமைச்சா்களுமான ஜோதிபிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சாா்யா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தன்மே பட்டாச்சாா்யா ஆகியோா் உள்பட மொத்தம் 306 வாக்காளா்கள் களத்தில் உள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் திரைப்பட இயக்குநா் ராஜ் சக்கரவா்த்தி, நடிகை கெளஷானி முகா்ஜி ஆகியோரும் இந்த ஆறாம் கட்டத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

53.21 லட்சம் ஆண் வாக்காளா்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளா்கள் என மொத்தம் 1.03 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,071 கம்பெனி மத்திய படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பாஜக சாா்பில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, நடிகா் மிதுன் சக்கரவா்த்தி ஆகியோா் முதல்வா் மம்தா பானா்ஜியின் ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாக குற்றம்சாட்டி பிரசாரம் செய்தனா்.

அதேபோல், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜியும், அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜியும் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.