ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் கரோனாவால் பலியான மனைவி: தகனம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் உதவ முன்வராததால் அவரது கணவர் தவித்துள்ளார்.

News image
உ.பி.யில் கரோனாவால் பலியான மனைவி: தகனம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்(படம்: டிவிட்டர்)
Updated On :28 ஏப்ரல் 2021, 11:54 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் உதவ முன்வராததால் அவரது கணவர் தவித்துள்ளார்.

ஜாவுன்புர் அருகே உள்ள ஓர் கிராமத்தில் வசிப்பவர் திலக்தாரி சிங். இவரது மனைவி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் கரோனா அச்சத்தால் மனைவியின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் உதவ முன்வர மறுத்துள்ளனர்.

இதையடுத்து தனது மிதிவண்டியில் மனைவியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முயன்ற முதியவரால் முடியாததால் சாலையிலேயே உடலை வைத்து அழுதுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதியவருக்கு உதவி செய்து உடலை தகனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.