பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கரோனா பாதிப்பு

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 9:35 am

DIN

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் கரோனாவால் பாதிக்கப்பட்டது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறி மட்டுமே உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கரோனா நிலைமையை நான் வீட்டிலிருந்தே கண்காணித்துக் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.