திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாட்டில் 60.35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

விரைவாக 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்துள்ளது.

News image
நாட்டில் 60.35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :8 பிப்ரவரி 2021, 2:36 pm

ANI

விரைவாக 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்துள்ளது.

மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,23,298 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் 2,23,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 60,35,660 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

அதில் சுகாதாரப் பணியாளர்கள் 54,12,270 பேருக்கு, 6,23,390 பிற முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், 24 நாள்களில் 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இத்தனை நபருக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்காவுக்கு 26 நாள்கள், பிரிட்டனுக்கு 46 நாள்கள் ஆனது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.