நாட்டில் இதுவரை 77.66 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வியாழக்கிழமை மட்டும் மாலை 6 மணி வரை 2,61,309 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 77,66,319 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 58,65,813 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 19,00,506 பேர் முன்களப் பணியாளர்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8,31,556 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.