திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இந்தியாவில் 4 பேருக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா: மத்திய சுகாதாரத்துறை

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த 4 பேருக்கு அந்நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
இந்தியாவில் 4 பேருக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா
Updated On :16 பிப்ரவரி 2021, 11:42 am

ANI

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த 4 பேருக்கு அந்நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரிட்டனில் பரவி வரும் கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா வகை கரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி குறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசியதாவது,

நாடு முழுவதும் தற்போது வரை 87,40,595 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக குறைந்துள்ளது. கேரளத்தில் 61,500 பேர் மற்றும் மகாராஷ்டிரத்தில் 37,383 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

ராஜஸ்தான், சிக்கிம், ஜார்க்கண்ட், மிசோரம், கேரளம், உத்தரபிரதேசம், ஒடிசா, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா, பிகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

லடாக், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, திரிபுரா, குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட 187 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பயணிகளுக்கு தென் ஆப்பிரிக்கா வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா, பிரிட்டன் கரோனா வகையிலிருந்து வேறுபட்டவை என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.