மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஒடிசா: கரோனா நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

கரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Updated On :19 பிப்ரவரி 2021, 3:48 pm

கரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், நோய்த் தொற்றுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது.

ஒடிசா மாநிலத்தில் தற்போது நாள்தோறும் 100க்கும் குறைவான மக்களுக்கு தான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மக்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.