கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘தேர்தலுக்கு தயாராக உள்ளோம்’: காங்கிரஸ் பொதுச்செயலாளர்

சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமைதெரிவித்துள்ளார்.

News image
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்(கோப்புப்படம்)
Updated On :26 பிப்ரவரி 2021, 3:44 pm

ANI

சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெள்ளிக்கிழமைதெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது,

சட்டப்பேரவை தேர்தலுக்கு காங்கிரஸ் முற்றிலும் தயாராக உள்ளது. மாற்றத்திற்காக, நல்லாட்சிக்காக மக்களிடம் முறையிடுவோம்.

அசாமில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில், கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.