ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சங்ககிரியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

சங்ககிரியில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டும் விழாவும், 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது. 

News image
மாணவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கும் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா.
Updated On :11 ஜனவரி 2021, 3:02 pm

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல்நாட்டும் விழாவும், 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா,  தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஆகியோர் சங்ககிரி பேரூராட்சிக்குசிக்குள்பட்ட பகுதிகளில் 14வது நிதிக்குழு மானியம் 2வது நிலை திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் 3வது வார்டு எஸ்.கே.நகர் பிரதான சாலை மற்றும் குறுக்குசாலைகள் அமைக்கவும், தமிழ்நாடு நகர்புற சாலைகள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் 12வது வார்டு பயணியர் மாளிகை முதல் பிஎஸ்ஜி கல்லூரி வழியாக திருச்செங்கோடு பிரதான சாலை வரையிலும்,  நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 18வது வார்டு ஆணைக்கல்பாளையத்தில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் அடிக்கல் நாட்டியும் தொடக்கி வைத்தனர்.

மேலும் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 129 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 168 மாணவிகளுக்கும், மாதிரிபள்ளி 57 மாணவ, மாணவிகளுக்கும், நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 40 மாணவ, மாணவிகளுக்கும், செட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி 58  மாணவ, மாணவிகளுக்கும், தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 106 மாணவ, மாணவிகளுக்கும் மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர். 

பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சங்ககிரி மாவட்டக்கல்வி அலுவலர் என்.இராமசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கே.கவிதா, சங்ககிரிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜன், உதவி தலைமையாசிரியர் சக்திவேல்,  தேவூர் தலைமையாசிரியர் ஏ.அய்யாசாமி, அதிமுக கிழக்கு ஒன்றியதுணைச் செயலர் மருதாஜலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தரராஜன், அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி, அதிமுக முன்னாள்தொகுதி கழகச் செயலர் வி.ஆர்.ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி சங்ககிரி ஒன்றியச் செயலர் கே.பிரசாந்த் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.