ஒடிசாவில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு

ஒடிசாவில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு
ஒடிசாவில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவு

ஒடிசாவில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து நிகழவாண்டிற்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்திற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் ஒடிசா அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

கரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நாள்களுக்கான  கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com