கேரள தொழில்துறை அமைச்சருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரள தொழில்துறை அமைச்சருக்கு கரோனா
Published on
Updated on
1 min read

கேரளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கேரளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை உறுப்பினர் ஸ்டீபனுக்கும் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல அமைச்சர்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com