கேரளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கேரளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை உறுப்பினர் ஸ்டீபனுக்கும் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல அமைச்சர்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.