ஜூலை 1 முதல் பயிற்சி மையத்தில் பயின்றால் ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற புதிய விதி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளத
ஜூலை 1 முதல் பயிற்சி மையத்தில் பயின்றால் ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற புதிய விதி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட  ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது நடத்தப்படும் தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வருகின்ற ஜூலை 1 முதல் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

மேலும், இவ்வாறு மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது, சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும், அதனால், சாலை விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com