மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 30 நாள்களாக அதிகரிக்குமா?

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 28 நாள்களிலிருந்து 30 நாள்களாக மாறுமா என்பது பற்றி..

News image

செல்போன்

file photo

Updated On :24 மார்ச் 2026, 8:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 28 நாள்களிலிருந்து 30 நாள்களாக மாறுமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, அடித்தால் வலிக்காததுபோல ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அதுதான், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், குறைந்தது ஒரே ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது 30 நாள்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு.

அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் ஒரு ஒரே மாத திட்டம், ஒரே ஒரு சிறப்புக் கட்டண ரீசார்ஜ், காம்போ திட்டங்களின் காலத்தை 30 நாள்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நுகர்வோர், தங்களுக்கு பிடித்த வாய்ப்புகளைத் தெரிவு செய்து பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும், ஒரு ஆண்டில் குறைந்தபட்சமாக 12 ரீசார்ஜ்களை மட்டுமே செய்ய வழி வகை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.