செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 28 நாள்களிலிருந்து 30 நாள்களாக மாறுமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, அடித்தால் வலிக்காததுபோல ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதுதான், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், குறைந்தது ஒரே ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது 30 நாள்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு.
அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் ஒரு ஒரே மாத திட்டம், ஒரே ஒரு சிறப்புக் கட்டண ரீசார்ஜ், காம்போ திட்டங்களின் காலத்தை 30 நாள்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நுகர்வோர், தங்களுக்கு பிடித்த வாய்ப்புகளைத் தெரிவு செய்து பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும், ஒரு ஆண்டில் குறைந்தபட்சமாக 12 ரீசார்ஜ்களை மட்டுமே செய்ய வழி வகை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை அப்படியே தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மேற்கொள்ளுமா? அல்லது மக்களுக்கு ஏற்பில்லாத ஏதேனும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை மட்டும் 30 நாள்களாக மாற்றி, அதற்கான கட்டணத்தையும் சற்று உயர்த்திவிட்டுக் கணக்குக் காண்பிக்குமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
Summary
Regarding whether cell phone recharge plans will change from 28 days to 30 days..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










