தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்

கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

News image
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
Updated On :3 மார்ச் 2021, 3:30 pm

DIN

கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், மார்ச் 1 முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

இன்று(மார்ச் 3) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
2.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
3.மத்திய அமைச்சர் அர்ஜூன் மேஹ்வால்
4.மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்
5.கேரள முதல்வர் பினராயி விஜயன்
6.மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி
7.சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத்
8.கோவா முதல்வர் பிரமோத் சாவத்

நேற்று(மார்ச் 2) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
2.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
3.மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
4.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
5.மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
6.தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா
7.மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

மார்ச் 1 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.தில்லியில் பிரதமர் மோடி
2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 
4.பிகார் முதல்வர் நீதிஸ் குமார்
5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்  
7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்
9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.