காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

எடப்பாடியில் அதிமுக மண்ணைக் கவ்வும்: விஜய பிரபாகரன்

எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 மார்ச் 2021, 9:28 am

DIN

எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக இன்று மதியம் அறிவித்தனர்.இதுகுறித்து பன்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் கூறியதாவது,

அதிமுகவின் தலைமை சரியில்லை, அவர்களுக்குதான் இனி இறங்கு முகம். தலையே போனாலும், தேமுதிக தன்மானத்தை இழக்காது. நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதி உள்பட ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக மண்ணைக் கவ்வும் எனத் தெரிவித்தார்.

குகையில் இருக்கும் சிங்கம் வெளியே வருகின்றது, இனி வேட்டை தான். சாணக்கியனாக இருந்தது போதும், இனி சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 99 சதவீதம் தனித்து தான் தேமுதிக போட்டியிடும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.