தமிழக தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் போட்டியிட 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மயிலாப்பூர் மற்றும் மதுரை தெற்கு தொகுதியில் 2 மூன்றாம் பாலினத்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 சுயேட்சைகள் உள்பட 70 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள் ஆகும்.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பெறும் நேரமும் முடிவடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com