/

வீட்டை கரோனா மையமாக மாற்றிய கர்நாடக உள்துறை அமைச்சர்

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது வீட்டின் வளாகத்தை கரோனா சிறப்பு மையமாக மாற்றியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:14 pm

ANI

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது வீட்டின் வளாகத்தை கரோனா சிறப்பு மையமாக மாற்றியுள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகத்தில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை, ஷிவ்கானில் உள்ள அவரது வீட்டின் வளாகத்தில் கரோனா நோயாளிகள் தனிமை படுத்திக் கொள்ளும் சிறப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Story image

இந்த சிறப்பு மையம் 50 படுக்கைகளுடன் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.