இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மே 19-ல் கூடுகிறது சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு மே 19ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

News image
Updated On :17 மே 2021, 4:06 pm

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு மே 19ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில், அனைத்து கட்சிகளிலிருந்தும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட கரோனா தடுப்பு குழு உருவாக்கப்பட்டது.

அந்தக் குழுவின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 19ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அடுத்தக் கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

குழுவில் யாா் யாா்? : இந்தக் குழுவில் 13 கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். நா.எழிலன் (திமுக), சி.விஜயபாஸ்கா் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினாா் நாகேந்திரன் (பாஜக), சதன் திருமலைக்குமாா் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பூவை ஜெகன்மூா்த்தி (புரட்சி பாரதம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.