கேரள முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து அந்த மாநில முதல்வராக பினராயி விஜயனும், 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில்,
முதல்வராக பதவியேற்று, தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.