யாஸ் புயல்: தமிழகத்தில் 9 ரயில்கள் ரத்து

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக 12 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
யாஸ் புயல்: தமிழகத்தில் 9 ரயில்கள் ரத்து
Published on
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக 12 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், சனிக்கிழமை (மே 22) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வரும் 24-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று வரும் 26-ஆம் தேதி ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்பட புயலால் பாதிக்கப்படும் மாநிலங்கள் வழியாக செல்லும் மொத்தம் 9 ரயில்கள் இருவழிகளிலும், 4 ரயில்கள் ஒருவழியிலும் ரத்து செய்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com