47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரயில்கள் மூலம் 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைப்பு

நாடு முழுவதும் ரயில்கள் மூலம் இதுவரை 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மே 2021, 5:46 am

DIN

நாடு முழுவதும் ரயில்கள் மூலம் இதுவரை 20,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள், விமானப்படை விமானங்கள் மூலமாக ஆக்ஸிஜன் டேங்கர்களை விரைவாக கொண்டு செல்லும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து பியூஸ் கோயல் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் 20,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு புதிய இலக்கை எட்டியுள்ளது.

நாட்டிற்கான சேவை செய்யும் பணியில் இதுவரை 300 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.