கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் திமுக அறக்கட்டளை சார்பில் கரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறக்கட்டளையின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.