எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

உசிலம்பட்டி நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2022, 11:49 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகர்மன்றத் துணைத் தலைவர் தேர்தலை தேர்தல் அதிகாரி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் தேர்தல் காலையில் நடைபெற்றது. இதில் 11வது வார்டு திமுக உறுப்பினர் சகுந்தலா வெற்றி பெற்றார்.

பிற்பகல் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ள நிலையில் மதியம் 2 மணியில் தொடங்கியது. அரை மணி நேரம் வேட்பாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 24 வார்டு உறுப்பினர்களின் இதில் 9 வார்டு உறுப்பினர்கள் மட்டும் வருகை தந்ததால் போதிய வருகைப் பதிவு இல்லாத காரணத்தினால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் துணைத் தலைவர் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் உரிய ஆணைகள் பிறப்பித்த உடன் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி முத்து தெரிவித்தார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.