ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உத்தரகண்ட்: கடும் பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்ப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 மார்ச் 2022, 9:23 am

DIN

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தின் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாமோலி மாவட்டத்தில் உள்ள நிதி-மனா பள்ளத்தாக்குகளை இணைக்கும் சாலை சனிக்கிழமை பனியால் மூடப்பட்டது.

இதனால் உள்ளூர்வாசிகள் பயணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலையில் பல தடைகள் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பள்ளத்தாக்கின் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், ராணுவ வாகனங்கள், ராணுவ வீரர்கள் எல்லையை கடப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சாலையில் விரைவான போக்குவரத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக, சாலையை சுத்தம் செய்யும் பணியை எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) மேற்கொண்டது.

இச்சூழலில் மாறிவரும் வானிலை மாற்றத்தால் பத்ரிநாத் நெடுஞ்சாலையைத் திறக்கும் பணியையும், மலாரி-நிதி எல்லைச் சாலையில் இருந்து பனி அகற்றும் பணியையும் பிஆர்ஓ மேற்கொண்டுள்ளது என பிஆர்ஓ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.