இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சாம்பல் புதன்: பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி!

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியது.

News image
இறைமக்கள் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.
Updated On :14 பிப்ரவரி 2024, 4:36 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியது. இதனையொட்டி, சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனா்.

இந்த தவக்காலம் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பது, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவர்.

இந்த சாம்பல் புதனை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில், அருள் தந்தையர்கள் சாம்சன் , ரூபன் அந்தோணி ராஜ், ஆல்பர்ட் சேவியர், தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் பங்குத்தந்தையா்கள், இறைமக்கள் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.

தவக்கால நாள்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் சிலுவைப் பாதை, நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.