மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மணமகளே வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

மணமகளே வா என்ற புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:38 pm IST

மணமகளே வா என்ற புதிய தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியத்துவம் பெறா (non prime) நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

டிஆர்பியிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே தொடர்ந்து முதன்மையான இடத்தைப் பிடித்து வருகிறது.

இந்த நிலையில், நடிகை சித்தாரா நடிக்கும் பிரதான தொடரான பூவா தலையா தொடர் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது. இத்தொடர் கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்குள் முடிகிறது.

இதனிடையே, திருமகள் தொடரில் நாயகியாக நடித்த ஹரிகா சாது நடிக்கும் இந்த புதிய தொடர் வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

ஹரிகா சாது, சுந்தரி தொடரில் நடித்துவரும் அரவிஷ் என்பவரை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர் திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.

இந்த தொடர் பூவா தலையா தொடருக்கு மாற்றாக பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், மணமகளே வா தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.