"என் பொறுமையைச் சோதிக்காதீர்கள்” - பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தேவகௌடா எச்சரிக்கை!

பிரஜ்வால் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக திரும்பி வந்து சட்டநடவடிக்கைகளுக்கு உட்படவேண்டும் என ஹெச்.டி.தேவகௌடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"என் பொறுமையைச் சோதிக்காதீர்கள்” - பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தேவகௌடா எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

ஹெச்.டி.தேவகௌடா பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்த கடிதம் ஒன்றினை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர், “குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அனைத்து உண்மைகளும் கண்டறியப்படும்வரை மக்கள் காத்திருக்க வேண்டும்.

அவரது நடமாட்டங்கள் பற்றி எனக்குத் தெரியாது என்றும், அவரது வெளிநாட்டு பயணம் குறித்து எனக்குத் தெரியாது 'மக்களை நம்ப வைக்க முடியாது' என்றும், என் மனசாட்சிக்கு பதிலளிப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கடவுளை நம்புகிறேன், எல்லாம் வல்லவருக்கு உண்மை தெரியும் என்று எனக்கு தெரியும்.

இந்தக் கட்டத்தில், ஒரேயொரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும். நான் பிரஜ்வலுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுக்க முடியும், மேலும் அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து காவல்துறையிடம் சரணடையுமாறு கேட்கலாம்.

அவர் சட்ட நடைமுறைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இது நான் வெளியிடும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு அவர் செவிசாய்க்காவிட்டால், அவர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் என் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக்கொள்ளும். அவர் என் மீது மரியாதை வைத்திருந்தால், அவர் உடனடியாக திரும்பி வர வேண்டும்.

அவருக்கு எதிரான விசாரணையில் என்னிடமிருந்தோ எனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ எந்த தலையீடும் இருக்காது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரஜ்வல், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். மேலும், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ கெளடாவின் பேரனும் ஆவார்.

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக 2019-இல் பிரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். இவர் கட்சியில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டபோது, வாக்களிக்கும் நாளில் பிரஜ்வலின் சில புகைப்படங்களும் விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின.

பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகங்களின் கவனம் அதிகரித்ததால், ஏப்ரல் 27 அன்று, கர்நாடக அரசு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா டிப்ளமேட்டிக் விசா மூலம் ஜெர்மனி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com