ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லி விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு புரளி!

தில்லி - வாரணாசி விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, புரளி என தெரியவந்துள்ளது.

News image
Updated On :28 மே 2024, 7:15 am

DIN

தில்லியிலிருந்து வாராணசிக்கு செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு ‘6E2211’, தில்லி விமானநிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விமானநிலைய பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமானத்தின் கழிப்பறையின் டிஷ்யூ பேப்பரில் '5:30 மணிக்கு வெடிகுண்டு' என எழுதப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானதையடுத்து, பயணிகள் அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு, சோதனை மேற்கொண்டதில் புரளி என தெரியவந்ததாக மத்திய தொழில் பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

துணை காவல் துறை ஆணையர் உஷா ரங்னானி கூறுகையில், அதிகாலை 5 மணியளவில் இந்த கடிதம் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.