நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் இன்றைய நிலை?!

திடீரென ஒரே நாளில் நம்மிடமிருந்து பணமதிப்பிழப்பு என்ற பெயரில் பறிக்கப்பட்டனவே அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் கதி என்ன ஆயிற்றோ? என்ற கவலை எல்லோருக்கும் இருக்குமில்லையா?

News image
Updated On :9 ஜனவரி 2018, 11:07 am IST

கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு செய்தியை இரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் அனைவரையும் அதிரச் செய்யும் விதத்தில் பரபரப்புச் செய்தியாக அறிவித்தார். அந்த நிமிடம் முதல் சில மாதங்களுக்குள்ளாக பொதுமக்கள் அதுவரை பயன்படுத்தி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு வெறும் காகிதங்கள் என்றாகின. தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாகப் புது 2000 மற்றும் 500, 200, 50 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

அதெல்லாம் சரி, ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நம்மோடு ஒட்டி உறவாடிய பின் திடீரென ஒரே நாளில் நம்மிடமிருந்து பணமதிப்பிழப்பு என்ற பெயரில் பறிக்கப்பட்டனவே அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் கதி என்ன ஆயிற்றோ? என்ற கவலை எல்லோருக்கும் இருக்குமில்லையா?

Story image

அந்த ரூபாய் நோட்டுக்கள் தற்போது தமிழக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனவாம். அங்கிருக்கும் கைதிகளில் திறன் வாய்ந்த சிலருக்கு அது ஒரு புது விதமான வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. ஆம், மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சிறு, சிறு துகள்களாக மாற்றப்பட்டு மிகுந்த அழுத்தம் கொடுத்து கைகளால் அரைக்கப்பட்டு அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். இந்தக் கோப்புகள் முற்றிலும் சிறைக்கைதிகளால் மேனுவலாகத் தயாரிக்கப்படுகிறது.

இதற்கென தனி இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த வேலையில் ஈடுபடுத்தப்படும் கைதிகளுக்கு நாளொன்றுக்கு 160 முதல் 200 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. தினமும் 25 முதல் 30 சிறைக்கைதிகள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டு ஒருநாளில் சுமார் 1000 கோப்புகள் வரை தயாரிக்கப்படுகின்றன என பிடிஐ செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Image courtesy: thenewsminute.com

Related Article

கின்னஸ் சாதனை படைத்த தெலுங்குப் பாடகர் ‘கஜல் ஸ்ரீனிவாஸ்’ பாலியல் வன்முறை வழக்கில் கைது!

இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா!

உங்களுக்குத் தான் பதவி ஆசை இல்லையே, நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குவீர்களா? திருமுருகன் காந்தியின் காட்டமான கேள்வி!

'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்!

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.