அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது: பிரதமர் மோடி பெருமிதம் 

உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2025, 11:18 am

DIN

புது தில்லி: உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வெற்றி உறுதியான பின்னர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியஇருவரும் தில்லியில் உள்ள பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அழைத்தனர். அதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர்

இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்

நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்

130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

இந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது; கடும் வெயிலிலும் மக்கள் வாக்களித்துள்ளனர்

உலக நாடுகள் இந்தியாவில் நடந்த இந்த ஜனநாயக திருவிழாவை வியந்து பார்க்கின்றன

என்னை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு வாக்களித்துள்ளனர்; இது நாட்டுக்கான வெற்றி

ஒடிசா, ஆந்திரா, சிக்கிமில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்

பாஜக ஆளாத மாநில அரசுகளுக்கு கூட மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.