
சிறப்புச் செய்திகள்
மக்களவைத் தேர்தல் 2019: மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக; தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்!
இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 339 மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 3வது ஆணியில் உள்ள கட்சிகள் 113 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிஸா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் முறையாக இந்த தேர்தலில் தான் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்பட்டு சரிபார்க்கப்பட உள்ளன.
எங்களுடன் இணைந்திருங்கள். செய்திகள் உடனுக்குடன்
செய்தி ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடியின் தாய்
பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான மோடி கூட்டணிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சியோடுமக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான மோடி கூட்டணிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். உங்களுடன் இணைந்து பணியாற்ற மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் தொண்டர்களுக்கு திடீர் அழைப்பு விடுத்திருக்கும் பாஜக தலைமை
பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் தொண்டர்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தை முழுமையாக ஆக்ரமிக்கிறது பாஜக
ராஜினாமா கடிதம் எழுதும் ஆந்திர முதல்வர்
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார்
வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி: மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து
முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி: ஓபிஎஸ்-இபிஎஸ்
தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை: ராமதாஸ் ஆறுதல்
நாடாளுமன்றத் தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை என்று பாமக தொண்டர்களுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை: ராமதாஸ் ஆறுதல்
நாடாளுமன்றத் தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை என்று பாமக தொண்டர்களுக்கு அதன் நிறுவனர் ராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியிலும் எனக்கு ஒரே ஒரே கவலைதான்: எதைச் சொல்கிறார் ஸ்டாலின்?
ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருந்தும் தலைவர் கலைஞர் இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி
முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது
தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு தந்துள்ளனர்
இந்த தேர்தலில் நாடு வென்றுள்ளது, நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்
நாங்களும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இந்த பிரமாண்ட வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்
130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
பாகுபலி.. பாகுபலி.. என்ற சினிமா காட்சியை நினைவுபடுத்திய புகைப்படம்
ராகுல் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: ஜெகன்மோகன் ரெட்டி
காங்கிரஸ் தலைவர் ராகுலைப் பொருத்தவரையில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தங்களுடைய நம்பகத்தன்மையைப் பெற்றவரைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள். அதுபோன்று தான் எங்களை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நம்பகத்தன்மை இல்லாதவர்களை மக்கள் தூக்கி வீசிவிட்டனர். விரைவில் நான் ஆந்திர முதல்வராக பதவியேற்க ஒரு நன்நாளை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
மகத்தான வெற்றிக்கு இடையேயும் பாஜகவை அண்ட விடாத மாநிலங்கள் எது தெரியுமா?
டிவிட்டரில் 'சவ்கிதார்' பட்டத்தை நீக்கிய மோடி!
ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டும் எழுந்து நிற்போம்: டிடிவி தினகரன்
மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு எழுந்து நிற்போம் என்று டிடிவி தினகரன் டிவீட் செய்துள்ளார்.
மோடி ஆட்சி 2.0! பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்த மாநிலங்கள்!
நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ஆத்ம பரிசோதனை செய்யும் நேரம் இது; மக்கள் தவறு செய்துவிட்டார்கள்: தமிழிசை
தமிழகத்தில் பாஜகவை ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வேட்பாளராக நின்றேன். மக்கள் தவறு செய்துவிட்டார்கள். மோடிக்கு வாக்களித்திருந்தால் பல நன்மைகள் கிடைத்திருக்கும். தற்போது மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஊழல் குற்றச்சாட்டு உடைய ஒருவரை.
தேர்தல் முடிவுகளை கவனிக்கும் பொதுமக்கள்
நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தெற்கு பெங்களூர் தொகுதியில் தேஜஸ்வி வெற்றி
இப்போதைய முன்னணி நிலவரம் என்ன?
நவம்பரில் பலசாலி.. டிசம்பரில் பின்னடைவு.. மே மாதம் வாழ்த்து: மோடி குறித்து ரஜினி
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி சுமார் 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வெற்றி
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.
தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு அமித்ஷா வாழ்த்து
இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது: மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி
இது காங்கிரஸின் தோல்வி மட்டுமல்ல, 'காவலாளி திருடன்' என்ற கோஷத்துக்குமானது
தென்னிந்தியாவின் ஒரு மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்டியது பாஜக
மோடிக்கு அனுப்பிய கடிதம்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து
அமேதியில் பின் தங்குகிறார்; வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார் ராகுல்
அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, ராகுலை விட 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்

சகல தோஷங்கள் நீங்கும் சக்கரபாணி கோயில்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

வரலாற்றில் முதல்முறை..! ஈரான் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க எஃப் - 35 விமானம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

