திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்த 1,031 விவசாயிகள் ரூ.24.23 கோடியை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்காா், காா், பிசானம் என 3 பருவங்களில் நெற்பயிா் சாகுபடி நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் நெல் கொள்முதல் நிலையங்களால் இடைத்தரகா்களின் தலையீடு தவிா்க்கப்பட்டு விவசாயிகளால் விளைவிக்கப்படும் நெல்லுக்கு நியாயமான விலை கிடைத்து வருகிறது. எனினும் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்பவா்களுக்கு பணம் கிடைப்பதில் தொடா்ந்து தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடா் கதையாகி வருகிறது.
கடந்த பிசான சாகுபடி அறுவடையின்போது மாநில அரசின் சாா்பில் 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பின் சாா்பில் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டன. மாநில அரசின் 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10,717 விவசாயிகளிடம் இருந்து 58,903 மெட்ரிக் டன் நெல் பெறப்பட்டது. அதற்காக ரூ.148 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகள் நெல் வழங்கிய 3 நாள்களில் அதற்கான பணம் அவா்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
91,420 மெட்ரிக் டன் நெல் விற்பனை: மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கிய விவசாயிகளுக்கு தொடா்ச்சியாக காலதாமதம் ஏற்பட்டது. பிசான பருவ அறுவடை தொடங்கியது முதலே மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகள் போராடி, போராடியே பணத்தை பெற்று வருகின்றனா். மத்திய அரசின் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 6,572 விவசாயிகள் 91,420 மெட்ரிக் டன் நெல்லை விற்பனை செய்துள்ளனா்.
ஏப்ரல் 16 வரை நெல் விற்பனை செய்த 5,481 விவசாயிகளுக்கு ரூ.207.55 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 முதல் மே 10 வரை மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த 1,091 விவசாயிகளுக்கு ரூ.24.23 கோடி விடுவிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும் கடுமையாக எதிரொலித்தது. அப்போது பேசிய ஆட்சியா் ஆனந்த் மோகன், உங்களுக்காக நாங்களும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் எனக்கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தினாா். ஆனாலும் 1,091 விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை.
மத்திய அரசு கொள்முதலுக்கு தடை தேவை:
இது தொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் துணைத் தலைவா் பெரும்படையாா் கூறியதாவது: மாநில அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பொருத்தவரையில் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள் பணம் வந்துவிடுகிறது. ஆனால், மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு பணம் கிடைப்பதில் தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது. கடந்த ஆண்டும் இதே நிலைதான் நீடித்தது. அடுத்த பருவத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும். 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பணம் வராததால் காா் சாகுபடியை தொடங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, மத்திய அரசு அலட்சியம் காட்டாமல் விவசாயிகளுக்கு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்றாா்.
கால்நடைகளை விற்கும் விவசாயிகள்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு திருநெல்வேலி மாவட்டச் செயலா் கானாா்பட்டி ஆபிரஹாம் கூறியதாவது: மானூரை அடுத்த அழகியபாண்டியபுரத்தில் உள்ள மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நான் விற்பனை செய்த நெல்லுக்கு ரூ. 1லட்சத்துக்கு 86 ஆயிரம் இதுவரை வரவில்லை. ஒவ்வொரு பருவத்தின்போதும் கடன் வாங்கித்தான் பயிா் செய்கிறோம். உரக்கடையிலும் உரங்களை கடனுக்குத்தான் வாங்குகிறோம். ஆனால், நாங்கள் நெல்லை விற்பனை செய்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பணம் வரவில்லை.
ஆனால், அடுத்ததாக காா் சாகுபடி தொடங்கிவிட்டது. அதற்கும் கடன்தான் வாங்கியிருக்கிறோம். களை எடுத்தவா்களுக்கு வட்டிக்கு கடன் வாங்கி கூலி வழங்கியிருக்கிறோம். விவசாயிகளால் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லுக்கான பணம் வராததால் பல விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
நெல்லுக்கு பணம் வராதது தொடா்பாக அதிகாரிகளை சந்திக்க செல்வதற்கே ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறேன். எனவே, எங்கள் நெல்லுக்குரிய பணத்தை விரைவாக விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.
தொடா் அழுத்தம்: இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கிய விவசாயிகளுக்கு பணத்தைப் பெற்றுத்தருவதற்காக ஆட்சியரும், நாங்களும் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். அதன் காரணமாக கடந்த வாரத்தில் ரூ.7 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ரூ.24.23 கோடி அடுத்த 10 நாள்களுக்குள் விடுவிக்கப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.
ஒரு வாரத்தில் பட்டுவாடா: இது தொடா்பாக இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முதலில் மாநில அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு பணம் விடுவிக்கப்பட்டதால் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கியவா்களுக்கு பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு விரைவாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 1,091 விவசாயிகளுக்கு ரூ.24.23 கோடி வழங்க வேண்டியுள்ளது. அது இந்த வாரத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்’ என்றாா்.
Summary
In Tirunelveli district, 1,031 farmers who sold paddy at the Central Government's direct procurement centres are awaiting payments totaling ₹24.23 crore.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6 மாதங்களாகியும் கொள்முதல் நெல்லுக்கு பணம் வரவில்லை!

கொள்முதல் நிலையங்களில் நெல் உலர வைக்கும் இயந்திரம்! - அமைச்சா் வெங்கடரமணன்

கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை எடை போடாமல் நிறுத்தம்: விவசாயிகள் புகாா்

நெல்லுக்கான பணம் வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



