தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

பறக்கும் ரயில் சேவை வந்த நிலையில் ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலையில் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை எழுந்துள்ளது.

News image
பரங்கிமலை ரயில் நிலையம்- from X
Updated On :17 மார்ச் 2026, 8:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எவ்வாறு, விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக இருக்கிறதோ அதுபோல பரங்கிமலை ரயில் நிலையமும் பல விதமான ரயில் சேவைகளை இணைக்கும் முனையமாக மாறியிருக்கிறது.

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வந்த பறக்கும் ரயில் சேவை தற்போது பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக, எழும்பூரிலிருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று சென்றால், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விரைவு ரயில்களைப் பிடிக்க எழும்பூர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே மண்டல மேலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், பயணிகள் தற்போது எழும்பூர் அல்லது சென்டிரலுக்கு 13 கி.மீ. மற்றும் 18 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியது உள்ளது. ஆனால், பரங்கிமலையில் விரைவு ரயில்கள் நின்றால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிமலை ரயில் நிலையமானது, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தரைத்தளத்தில் அமையப்பெற்ற ரயில் நிலையமாகும். தற்போது, பரங்கிமலை - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அது முதல் தளத்தில் அமைந்துள்ளது. அடுத்து, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது.

Story image

தெற்கு ரயில்வேயும் பரங்கிமலை ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்புகளை அதிகரித்து, நாள்தோறும் 10,000 ரயில் பயணிகளை எதிர்கொள்ளத் தேவையானவற்றை செய்துள்ளது. ரயில் நிலையத்தின் தெற்கு நுழைவாயிலிருந்து (ஆதம்பக்கம்) அதனுடன் ஒருகிங்கிணைக்கப்பட்ட பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் 5 நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாகச் சென்று வர 12 மீட்டர் அகலம் கொண்ட நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரும் படிகட்டுகள், நடைமேடைகள், முக்கிய நுழைவாயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய கட்டடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், அப்பகுதி மக்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தை, தென் சென்னையின் முக்கிய முனையமாக மாற்றவும், இவ்வழியாகச் செல்லும் விரைவு ரயில்கள் 2 நிமிடங்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

summary

With the arrival of the flying train service, there has been a demand for express trains to stop at Parangimalai, which has become a railway terminal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.