சென்னையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள கொண்டித்தோப்பில் தனியார் குடோன் ஒன்றில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், அங்கு பதுக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்கள் ஆகும்.
இது தொடர்பாக தண்டயார்பேட்டையை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.