பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களை ரஷியா, சீனா மூலம் இந்தியா ஊக்குவிக்கிறது என ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது கூறியதாக வெளியிடப்பட்ட அறிக்கை அந்த நாட்டில் அதிர்ச்சி அலையை எழுப்பியது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீது, "பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவை ரஷியா, சீனா உதவியுடன் பாகிஸ்தான் நிர்பந்திக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
எனினும், இதுகுறித்து அவர் தலைமையில் செயல்படும் ஜமாத்-உத்-தாவா அமைப்பு வெளியிட்ட ஆங்கில அறிக்கையில், "ரஷியா, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டி வருவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் நிர்பந்திக்க வேண்டும்' என்று கூறியதாக தவறாகக் குறிப்பிடப்பட்டது. இது, பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அதையடுத்து, ஜமாத்-உத்-தாவா அளித்த விளக்கத்தில், "இந்தியாவிடம் தங்களுக்குள்ள செல்வாக்கை ரஷியாவும், சீனாவும் பயன்படுத்தி, பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தூண்டாமல் தடுக்க வேண்டும். அதற்கு ரஷியா, சீனாவுக்கு பாகிஸ்தான் அழுத்தம் தர வேண்டும்' என்று ஹஃபீஸ் சயீது கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, காஷ்மீருக்கு விடுதலை அளிக்கும்வரை இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் துண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


