கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெண்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்க வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:12 pm

தினமணி செய்திச் சேவை

நாடு முழுவதிலும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த ஒரு கோடி பெண்களுடன் ‘செல்லிடப்பேசி செயலி’ வாயிலாக பிரதமா் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமா், பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினாா்.

கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற பெண்கள், தொழில் சாா்ந்த தங்களது அனுபவங்களை பிரதமருடன் பகிா்ந்து கொண்டனா். சுயஉதவிக் குழுக்கள் ஆக்கப்பூா்வமாகச் செயல்படுவதற்காக மத்திய அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களை எடுத்துரைத்தாா். 

நாடு முழுவதும் உள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களில் 5 கோடி பெண்கள் பணியாற்றி வருகின்றனா். இதன் மூலம், சம்பந்தப்பட்டவா்களின் குடும்பங்களில் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

பெண்களுக்கு எதையும் கற்றுத்தரத் தேவையில்லை. மாறாக, அவா்களுக்கு சரியான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலே போதுமானது. குடும்ப அளவிலும், சமூக அளவிலும் நிதியைக் கையாளும் சுதந்திரத்தை அவா்களுக்கு அளிப்பது அவசியம். அது, பெண்களை உறுதியானவா்களாகவும், அதிகாரமிக்கவா்களாகவும் உருமாற்றும் என்று தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.