ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழக அரசின் நிவாரண பொருள்களைக் கொண்டுசெல்ல கேரள சோதனைச்சாவடியில் தடை

தமிழக அரசின் கரோனா நிவாரண பொருள்களைக் கொண்டு செல்ல கேரள சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டதால் வருவாய்த் துறையினர் திரும்பி வந்தனர்.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 12:58 pm

DIN


போடி:   தமிழக அரசின் கரோனா நிவாரண பொருள்களைக் கொண்டு செல்ல கேரள சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டதால் வருவாய்த் துறையினர் திரும்பி வந்தனர்.

தமிழக கேரள எல்லையோரம் உள்ள மலைக் கிராமங்கள் டாப் ஸ்டேசன், சென்ட்ரஸ் ஸ்டேசன், போடிமெட்டு. இந்தக் கிராமங்களுக்குத் தேவையான ரேசன் பொருள்கள் ஜீப் மூலம் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும். இதில் டாப் ஸ்டேசன் மலைக் கிராமத்திற்கு கேரள மாநிலம் மூணாறு வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும்.

தற்போது கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இரு மாநில எல்லையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டாப் ஸ்டேசன் மற்றும் சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராம மக்களுக்கான கரோனா நிவாரண பொருள்கள், காய்கறிகள், மளிகை பொருள்களை வருவாய்த் துறையினர் வாகனத்தில் ஏற்றி போடிமெட்டு சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றனர்.

அப்போது கேரள காவல்துறை சோதனை சாவடியில் தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போடி வட்டாட்சியர் மணிமாறன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் நிவாரண பொருள்களைக் கொண்டு செல்ல கேரள காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டதால் வருவாய்த் துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.